 |
பார்த்தசாரதியின் புதிர்கள் -178 (04-11-2020)
கி.வா.ஜ ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.
‘ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?’ என்று பதிலளித்தார். கி.வா.ஜ.
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே ‘இம்மைக்கும் சரியில்லை, கொண்டு வந்த மறு மைக்கும் சரியில்லை’ என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.
இன்றைய குறிப்புகள் மூன்றும் கி.வா.ஜ.=வின் சிலேடைகளே/
|